சிவகங்கையை சேர்ந்த காயத்ரி தனது கருவில் உள்ளது பெண் குழந்தை என்பதை ஓய்வு பெற்ற அரசு செவிலியர் மூலம் அறிந்து கொண்டு கருக்கலைப்பு செய்துள்ளார். இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற போது அவர் கருகலைப்பு செய்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக ஓய்வு பெற்ற செவிலியர் காந்திமதியிடம் விசாரணை நடத்தியதில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக பெண் சிசுக்களை கருவிலேயே கலைக்கும் பணியை அவர் செய்து வந்தது தெரிய வந்துள்ளது. இவரை கைது செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.