சிவகங்கையைச் சேர்ந்த காயத்ரி என்பவர் தன்னுடைய கருவில் உள்ளது பெண் குழந்தை என்பதை ஓய்வு பெற்ற அரசு செவிலியர் மூலம் அறிந்து கொண்டு கருக்கலைப்பு செய்துள்ளார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது அவர் கருக்கலைப்பு செய்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக ஓய்வு பெற்ற செவிலியர் காந்திமதியிடம் விசாரணை நடத்தியதில் கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பெண் சிசுக்களை கருவிலேயே கலைக்கும் பணியை அவர் செய்துவந்தது தெரியவந்துள்ளது. அவரைக் கைது செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.