
தூத்துக்குடி சிலுவையார் கெபி தெருவில் கில்பர்ட் செல்லையன்(73) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் கடந்த 8-ம் தேதி அன்று திருவனந்தபுரத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் திரும்பி வந்து பார்த்த போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்த 32.5 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.24,500 பணம் ஆகியவற்றை திருவடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் தூத்துக்குடி மினி சகாயபுரத்தில் வசிக்கும் அந்தோணி ஆக்னல்(33), கண்ணன்(22), பீச் ரோடு பகுதியைச் சேர்ந்த அரவிந்த்(22) மற்றும் தூத்துக்குடி போல்பேட்டை மேற்கு பகுதியைச் சேர்ந்த மோகன்(34) ஆகியோர் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் நான்கு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் இது போன்று கடந்த 19.4.2025 அன்று கான்வென்ட் ரோடு பகுதியில் பூட்டியிருந்த ஒரு வீட்டில் பூட்டை உடைத்து 14. 75 சதுரம் தங்க நகைகளையும் ரூ.40000 பணத்தை திருடியது தெரியவந்தது. காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 8,75,000 மதிப்புள்ள 35 சவரன் தங்கவன நகைகள் மற்றும் ரூ. 20000 பணம், அவர்களிடம் இருந்த கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.