கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜாரகுவன்ஷியை அவரது மனைவி சோனம் ஹனிமூன் அழைத்துச் சென்று கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் பரப்பப்படுகிறது. ஆனால் சத்தீஸ்கரில் கடந்த 115 நாட்களில் 30 மனைவிகள் கணவர்களால் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி சராசரியாக 4 நாட்களுக்கு ஒரு பெண் தனது கணவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த 30 கொலைகளிலும் 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நடத்தை சந்தேகத்தாலும், 6 கொலைகள் போதையிலும் நடந்துள்ளது. மற்ற கொலைகள் குடும்ப வன்முறை, வரதட்சணை பிரச்சனை, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.