அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் அமைந்துள்ள பிரபல மருத்துவமனை மவுண்ட் சினாய். இங்கு புற்றுநோய் சிகிச்சை பிரிவில் மருத்துவராக பணி புரிந்து வந்தவர் கிரிஸ்டல் கஸெட்டா. இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. மருத்துவர் கிரிஸ்டல் நியூயார்க் நகரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சோமர்ஸ்  பகுதியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் கிரிஸ்டல் மற்றும் குழந்தை இருந்த  அறையில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதை கேட்ட அங்கிருந்த நபர் ஒருவர் என்னவென்று பார்க்க அந்த அறைக்கு செல்லும் முன்பே மீண்டும் அதே சத்தம் கேட்டது.

அந்த நபர் அறைக்கு சென்ற போது மருத்துவர் கிரிஸ்டல் மற்றும் குழந்தை என இருவரும் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்து கிடந்தனர். இதன் மூலம் கிரிஸ்டல் தனது குழந்தையை  கொன்றுவிட்டு தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. குழந்தையின் வயது வெளியிடப்படாத நிலையில் மருத்துவரின் இந்த செயலுக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.