
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டரை வெற்றிகரமாக நிலவில் இறக்கியது. இதன் மூலமாக விண்வெளி துறையில் இந்தியா சரித்திர சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் நிலவின் மேற்பரப்பில் செயற்கைக்கோள் இறங்கிய நேரத்தில் ஒடிசா மாநிலம் கேந்திர பாரா மாவட்டம் மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு சந்திரயான் என்று பெயரிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தின மாலை விக்ரம் லேண்டர் மெதுவாக தரையிறங்கி சாதனை படைத்தது. இதனை நினைவு கூறும் விதமாக ஒரு பெண் குழந்தை உட்பட நான்கு குழந்தைகளுக்கு சந்திரயான் என்ற பெயரை பெற்றோர்கள் சூட்டியுள்ளனர்.