ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் ஒருபுறம் உச்சக்கட்டம் அடைந்திருக்க மறுபுறம் பட்டுவாடா பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது காங்., அதிமுக, நாதக, தேமுதிக, சுயேட்சை உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் இதில் போட்டியிடுகின்றனர்.

இதற்கான வாக்குப்பதிவு 27ம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 238 வாக்குச்சாவடிகளில் 32 பதற்றமானது என தேர்தல் கமிஷன் கண்டறிந்துள்ளது. இதற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்தார்.