சமீபகாலமாக உணவு பிரியர்களுக்கு வித்தியாசமான முறையில் சில போட்டிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது டெல்லியை சேர்ந்த ராஜிவ் என்ற கடைக்காரர் ஒருவர் உணவு பிரியர்களுக்கு போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். தனது வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான முறையில் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என நினைத்த அவர் ஆம்லெட் போட்டி வைக்கலாம் என திட்டமிட்டு சுமார் 31 முட்டைகளை ஆம்லெட்டுகளாக மாற்றி அதனை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்த ஆம்லெட்டுகளில் 31 முழு முட்டைகள், 50 கிராம் சீஸ், 450 கிராம் வெண்ணெய், 200 கிராம் பன்னீர், பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் தக்காளி ஆகிய காய்கறிகள் அடங்கியுள்ள நிலையில் பிரெட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் விலை 1320 ரூபாய் என அவர் தெரிவித்துள்ள நிலையில் 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு தருவதாகவும் அறிவித்துள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.