தங்கர் பச்சான் இயக்கும் கரு மேகங்கள் கலைகின்றன என்ற திரைப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். அதில் ஒரு பாடலை ஜி.வி பிரகாஷ் இசையில் பிரபல பின்னணி பாடகியான சித்ரா பாடியுள்ளார். சென்னையில் இந்த பாடல் பதிவு நடந்து முடிந்தது. இது தொடர்பாக பேசிய கவிஞர் வைரமுத்து, 30 வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய பூஜைக்கு ஏத்த பூவிது பாடலை பாடிய அதே பாடகி சித்ராவை பாடல் பதிவில் சந்தித்தேன்.

அதே குரல் அதே கனிவு அதே கணிப்பு என்று நெகிழ்ச்சியுடன் வைரமுத்து பதிவிட்டுள்ளார். மேலும் திரை உலகில் மூவருமே தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இந்த படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளதாகவும் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.