ஒடிசா மாநிலத்தில் 14 வயது சிறுவனும் 11 வயது சிறுவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தான்சாங்கடா கிராமத்தில் பிரகாஷ் மோகந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 15 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் அவருடைய மனைவி குமாரி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்தார். இந்த தம்பதிகளுக்கு 14 வயதில் ஒரு மகனும் 11 வயதில் ஒரு மகனும் இருந்துள்ளனர்.

இதில் பிரகாஷ் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில் அதற்கு அவருடைய மகன்கள் மறுப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தான் சிறுவர்கள் இருவரும் வீட்டில் தூக்கிட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். ஆனால் அந்த சிறுவனின் மாமா சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்ள எந்த ஒரு அவசியமும் இல்லை எனவும் பிரகாஷ் தான் சிறுவர்களை திருமணத்திற்கு தடையாக இருந்ததால் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இதன் காரணமாக பிரகாஷை போலீசார் கைது செய்துள்ள நிலையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.