தமிழ்நாட்டில் தொடர் விடுமுறையின் காரணமாக மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு புறப்பட்டார்கள். இதற்காக சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டது. தற்போது விடுமுறை முடிந்து ஊருக்கு திரும்பி வருகிறார்கள். இப்படி விடுமுறை முடிந்து மக்கள் சொந்த ஊர் திரும்பும்போதெல்லாம் பேருந்து கட்டணம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போது ரயில் கட்டணமும் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமரியில் இருந்து சென்னைக்கு (3A) Premium Tatkal கட்டணம் ரூ. 1,390லிருந்து ரூ.3,908 ஆக அதிகரித்துள்ளது. Sleeper Class கட்டணமும் அதிகமாக உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.