பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அக்ஷய் குமார். இவர் தற்போது செல்பி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் அக்ஷய் குமார் தற்போது கலந்து கொண்டு வரும் நிலையில், படத்தின் விளம்பரத்திற்காக அக்ஷய் குமார் மும்பையில் தன்னுடைய  ரசிகர்களை சந்தித்தார். அப்போது தன்னுடைய ரசிகர்களுடன் சேர்ந்து 3 நிமிடங்களில் 184 செல்ஃபி புகைப்படங்கள் எடுத்துள்ளார். இதனால் நடிகர் அக்ஷய் குமார் தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஸ்மித் 3 நிமிடங்களில் 168 செல்வி புகைப்படங்கள் எடுத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருந்தார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு லண்டனில் வைத்து பிரபல ஹாலிவுட் நடிகரான டுவைன் ஜான்சன் 3 நிமிடங்களில் 105 செல்பி புகைப்படங்கள் எடுத்திருந்தார். இந்த 2 சாதனைகளையும் தற்போது நடிகர் அக்ஷய்குமார் முறியடுத்து 3 நிமிடங்களில் 184 செல்ஃபி புகைப்படங்களை எடுத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்த சாதனை தன் வாழ்வில் மிக முக்கியமானது என்றும் இதை தன் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் அக்ஷய் குமார் கூறியுள்ளார். மேலும் அக்ஷய் குமார் நடித்துள்ள செல்பி திரைப்படம் வருகின்ற 24-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.