கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவடைந்த பிறகு மே 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் படுகிறது. தற்போது கர்நாடகாவில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இதனால் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜகவின் தேசிய தலைவர்கள் பலர் கர்நாடகாவுக்கு சென்று தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இந்நிலையில் கர்நாடக தேர்தலில் போட்டியிட அதிமுக, பாஜகவிடம் 3 தொகுதி ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், பாஜக தங்கள் கூட்டணியில் அதிமுகவுக்கு சீட் கொடுக்க மறுத்துவிட்டது. இதையடுத்து நாளை சென்னையில் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணியில் அதிமுக தொடரலாமா வேண்டாமா என முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.