தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக திகழ்பவர் வருபவர் தளபதி விஜய். தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் பெரும் அளவில் ரசிகர் கூட்டத்தை சம்பாதித்து வைத்துள்ளார். இவர் தற்போது லியோ படத்திற்கு பிறகு பி ஒருசில படங்களில் கமிட்டாகி உள்ளார். ஏனெனில் லியோ படத்தில் பிஸியாக இருந்த விஜய் சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக பல்வேறு திட்டங்களை செய்து வந்தார். இதனால் விஜய் அரசியலில் எண்ட்ரி கொடுக்க உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கும் #Thalapathy68 படத்திற்குபின் 3 ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருக்க விஜய் முடிவு செய்துள்ளதாக  பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. 2024 மக்களவை, 2026 சட்டமன்ற தேர்தல்களை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக விஜய், அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் ரீதியாக ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.