தாய்லாந்து-மியான்மர் எல்லையில் ஒரு காட்டுப்பகுதி உள்ளது. இந்த காட்டுப் பகுதியில் பயன்படுத்தப்படாத கிணற்றிலிருந்து கடந்த மூன்று நாட்களாக சத்தம் கேட்டது. அந்த கிணற்றில் சொன்னாய் என்ற நபர் சிக்கினார். அவரது தூக்குரலை மக்கள் கேட்டனர். ஆனால் அவர்கள் பேய் அழுவதாக நினைத்து அச்சத்தில் இருந்தனர். காட்டுக்குள் இருந்து தொடர்ந்து வித்தியாசமான குரல் கேட்பதாக மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த நபரை பத்திரமாக மீட்டனர். அவரது உடலில் காயங்கள் இருந்தது மூன்று நாட்களாக அவர் உணவும் குடிநீரும் இல்லாமல் தவித்துள்ளார். தற்போது அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர் எப்படி அங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.