சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகா வருகை தந்துள்ளார். பெங்களூருவில் நாளை(சனிக்கிழமை) பிரதமர் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட இருக்கிறார்.

அதன்படி இன்று காலை 10 மணிக்கு பெங்களூரு தெற்கு பகுதி சோமேஷ்வரா பவன், ஆர்.பி.ஐ மைதானத்திலிருந்து துவங்கி மல்லேசுவரம் சாங்கி டாங்கி ஏரி வரை ஒட்டு மொத்தமாக 26.5 கி.மீ தூரம் பிரதமர் மோடி ஊர்வலம் செல்ல இருக்கிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடி ஊர்வலத்தை முன்னிட்டு பெங்களூருவில் 35 சாலைகளில் வாகனங்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் காலை 8 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை அந்த 35 சாலைகளிலும் வாகனங்கள் போக தடைசெய்யப்பட்டுள்ளது.