கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் அருகே உள்ள பகுதியில் சன்னி என்பவரின் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் ஒரு கிணறும் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காட்டு யானை ஒன்று தவறி அந்த கிணத்துக்குள் விழுந்தது. அந்த கிணறு 25 அடி ஆழம் என்பதால் யானையால் வெளியே வர முடியவில்லை. இது குறித்து மலப்புரம் காவல் வனத்துறையினருக்கு தகவல்கள் வழங்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் கிணற்றுள் விழுந்த யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதி மக்கள் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மீட்பு பணி பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை வனத்துறையினர் சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அதன் பின் மீட்பு பணி மீண்டும் தொடங்கியது. இந்த மீட்பு பணியில் 60 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் ஈடுபட்டனர். யானையை கிணற்றுக்குள் இருந்து வெளியே கொண்டு வர, கிணற்றின் அருகே மிகப்பெரிய குழி ஒன்று தோண்டப்பட்டது. அதன் வழியாக யானை வெளியே கொண்டுவரப்பட்டது. சுமார் 20 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு கிணற்றுள் இருந்த காட்டு யானை மீட்கப்பட்டது. அதன் பிறகு வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விட்டனர்.