தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு 100 கோடி ரூபாய் பரிசு தொகையை அரசு இதுவரை வழங்கியுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், இந்தியா முழுவதும் திரும்பிப் பார்க்கும் அளவில் தமிழக வீரர்கள் விளையாட்டு துறையில் பல சாதனைகளை படைத்து வருகின்றனர். விளையாட்டுப் போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு வெற்றி பெற்ற 24 மணி நேரத்தில் அவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.