மதுரை கிழக்கு மற்றும் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, மத்திய அரசால் விருதுநகரில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. முழு தென்னிந்தியாவுக்குமான மதுரை எய்ம்ஸ் கல்லூரி, 2600 கோடி நிதியில் கட்டப்பட்டு வருகிறது. 2026 ஆம் ஆண்டு மே மாதம் மதுரை எய்ம்ஸ் முழு பயன்பாட்டுக்கு வரும். 22,000 பேருக்கு மதுரை எய்ம்ஸ் மூலம் நேரடியான மற்றும் மறைமுகமான வேலை வாய்ப்பு வரும் என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.