
ரூ.2000 நோட்டுகளில் 97 சதவீதத்திற்கும் அதிகமானவை திரும்பி வந்துவிட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதன்கிழமை தெரிவித்துள்ளது. மக்கள் இன்னும் ரூ.10,000 கோடி ரூபாய் நோட்டுகளை தங்கள் கைவசம் வைத்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு மே மாதம் ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற்றது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வரவு வைத்து மாற்றிக்கொள்ள அறிவுறுத்தியது. பின்னர் அக்டோபர் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இல்லை. தற்போது, பெரிய தொகை கொண்ட ரூபாய் நோட்டாக ரூ.500 மாறியுள்ளது.