இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானிக்கு நேற்று மெயில் மூலமாக கொலை மிரட்டல் வந்துள்ளது. சோபன் குமார் என்ற பெயரில் இருந்து வந்த அந்த மெயிலில் தங்களுக்கு 20 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் சுட்டுக்கொலை செய்து விடுவோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்திய அளவில் துப்பாக்கி சூட்டில் தலை சிறந்தவர்கள் எங்களிடம் இருப்பதாகவும் அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முகேஷ் அம்பானியின் செக்யூரிட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.