
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் 2.66 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மார்ச் 1 முதல் நேற்று வரை இயல்பை விட 17 விழுக்காடு குறைவாக மழை பெய்து உள்ளதாகவும் மே 23ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர் மற்றும் தேனி ஆகிய மாவட்ட மக்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கன்னியாகுமரி, நெல்லை, கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 10 பேரிடர் மீட்பு குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன