தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகளானது கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியானது. 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். பொதுத்தேர்வில் 47,934 பேர் தேர்ச்சி அடையவில்லை. இதனால், அவர்களுக்கான துணைத்தேர்வு தேதி ஜூன் 19 முதல் ஜூன் 26 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தேர்வுக்கு வருகை தராத மாணவர்களுக்கும் அந்தந்த பள்ளிகளில் இன்று (15-ந்தேதி) முதல்  சிறப்பு வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை சார்பாக உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 17ம் தேதி வரை நடக்க இருக்கும் சிறப்பு வகுப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.