தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் தமிழ் மொழி பாடம் அமல்படுத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். நேற்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், நடப்பு கல்வி ஆண்டில் தன்னாட்சி கல்லூரிகளைத் தவிர அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் தமிழ் மொழி பாடமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் நடப்பு கல்வி ஆண்டு முதல் தமிழ் மொழி பாடமாக அமல்படுத்தப்படும் எனவும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.