திமுக – மதிமுக இடையே  நாடாளுமன்ற தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.  டி.ஆர். பாலு தலைமையிலான ஆ.ராசா, பொன்முடி, பெரியசாமி, கே. என் நேரு உள்ளிட்டோர் அடங்கிய திமுக குழு உடன் மதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது. மதிமுகவில் அர்ஜுனராஜ், அந்திரிதாஸ், சேஷன் உள்ளிட்டோர்  பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து மதிமுக நிர்வாகிகள் பேட்டியளித்தனர். மதிமுக நிர்வாகி அர்ஜுனராஜ் அளித்த பேட்டியில், திமுகவுடனான பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி சின்னத்திலேயே போட்டியிடுவோம். 2 மக்களவை, ஒரு மாநிலங்களவை சீட்டுகளை கேட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

கடந்த முறை ஈரோடு தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை மதிமுகவிற்கு ஒதுக்கிய நிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. முன்னதாக திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.