திருவாரூர் மாவட்டம் ஒட்டக்குடி பகுதி சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சுஜாதா. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். துபாயில் வேலை பார்க்கும் பிரபாகரனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே செல்போனில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த சுஜாதா தனது வீட்டுக்கு யாரும் இல்லாத நேரம் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சுஜாதாவை மீட்டு திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சுஜாதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.