டெல்லியில் கடந்த சனிக்கிழமை அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கேசவபுரம் பி எஸ் பகுதியில் இரண்டு குழந்தைகளை அவர்களது தந்தையே விஷம் குடிக்க வைத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் இரண்டு குழந்தைகளையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து குழந்தையின் தந்தை அங்கிருந்து தப்பி சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தந்தையின் கடையில் இந்த கொலை நடைபெற்றுள்ளதாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அவர் ஏன் தனது குழந்தைகளை கொன்றார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.