தமிழ்நாடு கடந்த இரண்டு ஆண்டுகளில் 3585.3 ஹெக்டேர் பரப்பளவில் 24 காப்பு காடுகளை அறிவித்துள்ளது. பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் 23.69 சதவீதமாக இருந்த மரம் மற்றும் காடுகளின் பரப்பை 33 சதவீதமாக அதிகரிப்பதற்கு அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மாநில அரசானது 2021 முதல் 2023 ஆம் ஆண்டில் திண்டுக்கல், தர்மபுரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, கள்ளக்குறிச்சி, சிவகங்கை மற்றும் தேனியாகிய எட்டு மாவட்டங்களில் காப்பு காடுகளை அறிவித்துள்ளது. 1882 ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் வன சட்டத்தின் 16-வது சட்டப்பிரிவின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.