ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை வடக்கு கடற்கரை பகுதி வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக மத்திய புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது வேதாளை வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சாவை கடத்துவதற்காக நின்று கொண்டிருந்த ஆர்.சதீஸ்வரன் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல உண்மை தகவல்கள் வெளி வந்தன. அதன் பின் அந்த நபர் மறைத்து வைத்திருந்த ரூ.18 லட்சம் மதிப்புள்ள 180 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த கஞ்சா கடத்தலில் தொடர்புடைய எஸ்.காமேஷ், கே.வினோத் கண்ணன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில் வேதாளை பகுதியை சேர்ந்த சசி மற்றும் கோபி வட மாநிலத்திலிருந்து கஞ்சாவை வாங்கி வந்ததாகவும், தற்போது அதனை இலங்கைக்கு கடத்த இருப்பதாகவும் கூறினர். மேலும் இது குறித்து போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்திவரும் நிலையில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள மற்ற குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.