
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே வேமாண்டம் பாளையம் பகுதியில் விக்னேஷ் என்ற 31 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்க்கும் நிலையில் ஒரு 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார்.
இவர் சிறுமியை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவதாக ஊராட்சி ஒன்றிய அலுவலருக்கு செய்தி கிடைத்துள்ளது. உடனடியாக அவர் கோபி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கார்த்திக் சிறுமியை திருமணம் செய்து கொண்டது உறுதியானது.
தற்போது அந்த சிறுமி இரண்டு மாதம் கர்ப்பிணி ஆக இருப்பதும் தெரிய வந்தது. இதன் காரணமாக விக்னேஷை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.