
திருவொற்றியூர் ஜானகி அம்மாள் எஸ்டேட்டில் அருள் (வயது 47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெய்லராக இருக்கிறார். அவரது மனைவி அம்சா (வயது 40) சில நாட்களுக்கு முன்பு முடக்கு வாத நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த அருள் தனது மகள் ரம்யா (இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி) மற்றும் மகன் ராஜேஷ் (ஒன்பதாம் வகுப்பு மாணவன்) ஆகியோருடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அம்சா இறந்த 16-வது நாளில் வீட்டின் கதவு திறக்காததால் உறவினர்கள் சென்று பார்த்தபோது மூவரும் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மருத்துவமனைக்கு உடனே அவர்களை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.