இஸ்ரேல் காசா இடையேயான தாக்குதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. தொடர்ந்து கடந்த 11 வாரங்களாக காசாவில் அத்தியாவசியமான உதவிகளை செய்வதற்கு இஸ்ரேல் முழுமையாக தடை செய்திருந்த நிலையில், தற்போது சர்வதேச அழுத்தங்களின் காரணமாக குறைந்த அளவிலான உதவிகளை அனுமதிக்க தொடங்கியுள்ளது. அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானத்துறை தலைவர், இஸ்ரேலின் இந்த நடவடிக்கை குறித்து பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது “அடுத்த 48 மணி நேரத்தில் காசாவில் 14,000 குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. கடந்த திங்கட்கிழமை குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள் கொண்டு வந்த வெறும் 5 லாரிகள் மட்டுமே காசாவிற்குள் அனுப்பப்பட்டதாகவும், அவை இன்னும் தேவையுள்ள பகுதிகளுக்கு செல்லவில்லை. அந்த குழந்தைகளுக்கு உதவி செய்வதற்காக ஐநா 100 லாரிகளை அனுப்ப முயற்சி செய்து வருகிறது” என்றும் கூறினார்.

அதன்பின் “இஸ்ரேலின் இந்த கொடூரமான நடவடிக்கைகளுக்கு பிரிட்டன், கனடா,பிரான்ஸ் போன்ற நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் மனிதநேயம் மீதான தடையை நீக்க வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர். இஸ்ரேல் அமைச்சரவை உறுப்பினர்கள் சிலர் பசு பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற வேண்டும் என தெரிவித்ததை தொடர்ந்து இஸ்ரேலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.

காசாவில் உணவில்லாமல் தவிக்கும் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளை தட்டிக் கொடுக்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுகின்றனர். நாங்கள் இந்த 14,000 குழந்தைகளையும் காப்பாற்ற நினைக்கிறோம்” என்று உணர்ச்சியுடன் கூறினார். இதைத்தொடர்ந்து “இஸ்ரேல், காசா தாக்குதலில் பலர் உயிரிழந்து விட்டதாகவும், இஸ்ரேலின் நடவடிக்கையால் காசா முழுவதும் மனிதாபிமான பேரழிவு நிலவுகிறது என்பது உலகளாவிய கவலையை ஏற்படுத்தியுள்ளது” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.