ரோம் நகரில் உள்ள சிறைச்சாலையில் 12 பெண் கைதிகளின் பாதங்களை போப் பிரான்சிஸ் கழுவி முத்தமிட்டார். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு விருந்தளித்து, அவர்களது பாதங்களை கழுவியதை நினைவு கூறும் வகையில் இந்த சடங்கு நடைபெற்றது.

வழக்கமாக இதற்கு முன் போப் பதவி வகித்தவர்கள், வாடிகன் தேவாலயத்தில் இந்த சடங்கை கடைப்பிடிப்பார்கள். ஆனால் இந்த வழக்கத்தை மாற்றி, தற்போதைய போப் பிரான்சிஸ் ஜெயிலுக்கு நேரில் சென்று இந்த புனித சடங்கை நிகழ்த்தினார்.