தமிழகத்தில் 1196 செவிலியர்களுக்கு நாளை பணி ஆணை வழங்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் தற்காலிக பணியில் சேர்ந்த 713 செவிலியர்களுக்கும், 2015 ஆம் ஆண்டு முதல் தற்காலிக பணியில் உள்ள 483 செவிலியர்களுக்கும் நாளை பணி ஆணை வழங்கப்படும் என்று கூறினார். மேலும் காலி பணியிடங்களுக்கு ஏற்ப பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.