ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் அஞ்சு. 34 வயதான இவர் முகநூல் வாயிலாக பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா என்பவர் உடன் நட்புடன் பழகி வந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு அரவிந்த் என்பவருடன் அஞ்சு-க்கு திருமணம் முடிந்து தற்போது 15 வயது மற்றும் ஆறு வயதில் குழந்தைகள் உள்ளனர். அஞ்சு கடந்த வியாழன் அன்று தனது முகநூல் நண்பனை தேடி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.

அங்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவர் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளார். தான் பாகிஸ்தானுக்கு வந்தது நஸ்ருல்லாவை திருமணம் செய்து கொள்ள அல்ல. தன்னை சீமாவுடன் ஒப்பிட வேண்டாம் என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட அஞ்சு இஸ்லாம் மதத்திற்கு மாறி நஸ்ருல்லாவை திருமணம் செய்து விட்டதாகவும் மேலும் அஞ்சு என்ற தனது பெயரை பாத்திமா என்று மாற்றிக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.