மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களுக்கும் பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொண்டார். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் லட்சாதிபதிகளாக பெண்கள் மாறும் திட்டத்தை அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் 11 லட்சம் பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.

அதன்பின் 2 மாதத்தில் புதிதாக 11 லட்சம் பெண்கள் கோடீஸ்வரராக இருப்பதாகவும் அதற்காக ரூபாய் 2500 கோடி நிதியை 4.3 லட்சம் சுய உதவி குழுவை சேர்ந்த 48 உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் ஒதுக்க உள்ளதாக கூறியுள்ளார். இதை தவிர  5000 கோடி நிதியை 2.35 லட்சம் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 25.8 லட்சம் உறுப்பினர்களுக்கு பயன்பெறும் வகையில் கடனுதவி வழங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் 75 ஆவது ஆண்டு விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பின் அங்கு உயர்நீதிமன்றத்தின் அருங்காட்சியத்தையும் அவர் திறந்து வைத்தார். அங்கு பேசிய அவர் நாடு முழுவதும் மூன்று கோடி பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது எனவும் ஆண்டுக்கு ஒரு லட்சம் வருமானம் ஈட்டும் சுய உதவி குழுக்களை சேர்ந்த ஒரு கோடி பெண்கள் ஏற்கனவே இந்த திட்டத்தில் இணைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.