அயோத்தி ராமர் கோயில் ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது. இதனால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அதனால் கடந்த 11 நாட்களில் இதுவரை 25 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், காணிக்கை மற்றும் நன்கொடையாக ரூ.11.5 கோடி கிடைத்துள்ளதாம். அதில் ரூ.8 கோடி ரொக்கம் என்றும், காசோலை மற்றும் ஆன்லைன் மூலம் ரூ.3.50 கோடி கிடைத்துள்ளதாக அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.