பொதுவாகவே சினிமா நடிகர்கள், நடிகைகளுக்கு அவர்களின் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைப்பது வழக்கம். அந்த ரசிகர் மன்றம் வாயிலாக குறிப்பிட்ட நடிகர், நடிகையின் பிறந்தநாளின் போது ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் எதாவது செய்வார்கள். அந்தவகையில் தற்போது சென்னையில் சூர்யா ரசிகர்கள் செய்யும் செயல் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு மாதம் சாலையோர வாசிகளுக்கு வடசென்னை சூர்யா ரசிகர்கள் உணவு வழங்கி வருகின்றனர். காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இலவசமாக உணவு வழங்கும் இவர்களுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. இந்த சேவையை கடந்த 3 ஆண்டுகளாக செய்து வருகிறார்கள் இவர்கள்.