1056 பணியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி யூபிஎஸ்சி வெளியிட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 5ஆம் தேதி நேற்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடைசி நேரத்தில் சர்வர் கோளாறு ஏற்பட்டதால் மார்ச் ஆறாம் தேதி இன்று மாலை வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை upsconline.nic.in என்ற இணையதளத்தில் அறியலாம். முதல்நிலை தேர்வு வருகின்ற மே 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.