செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  128 வழக்கு என் மேல இருக்கு. அந்த வழக்குகளை எடுத்துட்டு வர முடியாது.நான் மக்களுக்காக போராடி போராடி சிறைக்கு போனது.   அதை தொட முடியல. அதனால இந்த வழக்கை எடுக்கும் போது என்னை  பெண்கள் மீது  சம்பந்தபடுத்தும்போது அசிங்கப்படுத்திடலாம். மக்களிடம் இருந்து அன்னியப்படுத்தலாம். மதிப்பை சிதைச்சிடலாம்; நற்பெயரை சிதைசிடலாம்ன்னு செய்யப்பட்டது.
அது உங்களுக்கே தெரியுமே. இன்னைக்கு ஒரு மாசம் காலம் பேசக்கூடிய பேச்சா இது. நாட்டுல எந்த பிரச்சினையும் கிடையாதா ? இவுங்க கொடுத்த குற்றசாட்டு  புதுசு புதுசா இருக்கு. முதல்ல திருமணமானது என்று சொல்லவில்லை, முதல்ல 60 லட்சம் பணம் கொடுத்தேன், நகை கொடுத்தேன் என சொல்லல. ஒவ்வொன்னையும் புதுசு புதுசா சேர்த்து சொல்லும்போது…
முன்னுக்கு பின்னு மாறி மாறி பேசுறீங்களே என காவல்துறையும் கேட்கல, ஊடகமும் கேட்கல. அப்போ வெறும் அவதூறு. ஒரு போராட்டக்காரரனை அவதூறு வச்சி மூடிறலாம்ன்னா… எப்படி சகிக்கிறது ? 60 லட்சம் பணம் கொடுத்தாங்களா ? 30 லட்சம் மதிப்பிலான நகை கொடுத்தார்களா ? என்று விசாரணை நடத்தினார்கள். அதெல்லாம் ஒன்றும் இல்லை. சும்மா சொல்லுறாங்க என சொன்னேன் என தெரிவித்தார்.