தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் தேர்வு கிடையாது என தொடக்கக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியே தேர்வு நடத்துவதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ஆன்லைன் தேர்வு கிடையாது என்றும் பொதுவான வினாத்தாள் அடிப்படையிலேயே இரண்டாம் பருவ தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.