திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேதுபதி(24). இவருக்கு திருமணமாகி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் ஆண் குழந்தை பிறந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று  உப்பிலியாபுரம் அருகே சென்ற போது பைக் விபத்தில் சிக்கி சேதுபதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சேதுபதி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவரது இதயம், சிறுநீரகங்கள்,  கண்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க குடும்பத்தினர் முன்வந்தனர். இதனால் அறுவை சிகிச்சை மூலம் அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐந்து பேர் பயனடைய உள்ளனர்.