கடந்த ஒரு மாத காலமாக விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கிலோ 10 ரூபாய் என்று இருந்தது. இந்த நிலையில், நேற்றைய நிலவரப்படி  சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி விலையானது ரூ.60 முதல் ரூ.70க்கு விற்கப்படுகிறது. மேலும் சில்லறை விற்பனை கடைகளில் ரூ.80 முதல் ரூ.90க்கு தக்காளி விற்கப்படுகிறது.

தமிழகத்தில் ஏற்பட்ட தக்காளி விளைச்சல் பாதிப்பு, அதேநேரம் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைவு போன்ற காரணங்களால் இந்த திடீர் விலை உயர்வு ஏற்பட்டதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தட்டுப்பாடு அதிகரித்தால் தக்காளி விலை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.