இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் தினம்தோறும் புது விதமான வீடியோக்கள் வைரலாகி கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக செல்ல பிராணிகள் மற்றும் விலங்குகளின் வீடியோவிற்கு நினைவே இருக்காது. தற்போது குளத்தில் ஆனந்த குளியல் போட்ட ஒரு யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. யானைகள் என்னதான் பார்ப்பதற்கு கம்பீரமாக இருந்தாலும் குழந்தைகள் போல் அவை செய்யும் சில சேட்டைகள் காண்போரை ரசிக்க வைக்கும்.

அதன்படி தற்போது இணையத்தில் ஒரு யானையின் வீடியோ வைரல் ஆகி வருகிறது. டி ஆர் சி மலைவாழ் கிராமத்தில் யானை ஒன்று புகுந்துள்ளது. அந்த யானையைப் பார்த்ததும் கிராம மக்கள் பயந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது அந்தப் பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 200 லிட்டர் கார்ன் பீர் அனைத்தையும் அந்த யானை குடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து போதை தலைக்கு ஏறியதும் யானை தரையில் விழுந்து மட்டையாகி விட்டது.

அப்போது கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் யானை மீது ஏறியும் சறுக்கையும் விளையாடினர். ஆனாலும் அந்த யானை போதையில் மயங்கிய நிலையில் படுத்திருந்தது. ஒரு கட்டத்தில் எழுந்த யானை எழ முடியாமல் மீண்டும் தரையில் விழுந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.