
ஹரியானா மாநில முன்னாள் முதல்வரான ஓம் பிரகாஷ் சௌதாலா மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு 89 வயது ஆகிறது. குரு கிராமில் இருக்கும் அவரது இல்லத்தில் வைத்து ஓம் பிரகாஷ் ஓம் பிரகாஷ் சௌதாலாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் நான்கு முறை ஹரியானா மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்து சாதனை படைத்தவர் ஓம் பிரகாஷ் சௌதாலா. இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவரான இவர் ஏழு முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். வயது மூக்கு காரணமாக அரசியலில் இருந்து சற்று விலகி இருந்த ஓம் பிரகாஷ் சௌதாலா மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.