திடக்கழிவு மேலாண்மை குறித்த தொழில்நுட்பத்தை அறிந்து அதனை பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்துவதற்காக சென்னை மேயர் பிரியா ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு  சென்றுள்ளார். திடக்கழிவு மேலாண்மை குறித்து இத்தாலி நாட்டில் உள்ள ரோம்‌நகரில் URBASER நிறுவனத்தின் திடக்கழிவு பெறப்படும் நிலையத்தை நேற்று பார்வையிட்டார்.

அதன்பின்னர் திடக்கழிவுகளை கையாளும் முறை மற்றும் அதன் தொழில்நுட்பத்தை அதிகாரிகளுடன் இணைந்து கேட்டறிந்தார். இந்நிகழ்வில் துணை மேயர், கூடுதல் ஆணையர் சங்கர்லால் குமாவத் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.