தமிழகத்தில் திட்டமிட்டபடி போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் தமிழகத்தில் அரசு பேருந்துகள் ஓடாது என்பதால் பொதுமக்கள் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வது கடினம்.