
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 35 வயது பெண் தன்னுடைய கணவர் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வரும் நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஒரு 35 வயது வாலிபருடன் நட்பாக பழகி வந்தார்.
அதாவது இவர்கள் இருவரும் பள்ளியில் ஒன்றாக படிக்கும்போது இருந்தே தோழர்கள். இதனால் அந்த பெண்ணை பார்க்கும் போதெல்லாம் வாலிபர் நன்றாக பேசுவார். இந்நிலையில் அந்தப் பெண் சம்பவ நாளில் தன்னுடைய உறவினர் ஒருவர் வீட்டிற்கு திருமணத்திற்காக சென்ற நிலையில் பின்னர் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப குழித்துறை பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.
அப்போது அந்தப் பெண்ணின் நண்பர் காரில் வந்த நிலையில் அவர் வீட்டில் கொண்டு போய் விடுவதாக கூறியுள்ளார். நண்பன் தானே என நம்பி அந்த பெண்ணும் அவருடன் காரில் சென்ற நிலையில் சிறிது தூரம் சென்றதும் அந்த வாலிபர் வீட்டிற்கு செல்லாமல் வேறு திசையில் சென்றுள்ளார்.
இது பற்றி அந்தப் பெண் கேட்டபோது நீ என்னுடைய வீட்டிற்கு வந்து என் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துவிட்டு போ என்று கூறியுள்ளார். அந்தப் பெண்ணும் சம்மதம் தெரிவித்து அவருடன் சென்ற நிலையில் அவரது வீட்டிற்கு சென்றார். ஆனால் அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது அங்கு யாரும் இல்லை என்பது.
பின்னர் அந்த வாலிபர் திடீரென கதவைப் பூட்டுவிட்டு அந்த பெண்ணை அறைக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணிடம் இது பற்றி வெளியே சொல்லக்கூடாது எனவும் மீறி கூறினால் உன் குழந்தைகளையும் கணவனையும் காரை ஏற்றி கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
அவர் மீண்டும் தன் காரில் அந்த பெண்ணை ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு செல்லும் வழியில் இறக்கிவிட்டு வந்த நிலையில் இது வெளியே தெரிந்தால் அவமானம் என்பதால் அந்த பெண்ணும் பயத்தில் யாரிடமும் சொல்லாமல் இருந்தார். ஆனால் சில நாட்களாக அந்த பெண் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததால் அதனை கவனித்த கணவன் அந்த பெண்ணிடம் கேட்க அவர் அழுது கொண்டே நடந்த அனைத்து விவரங்களையும் கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கணவன் உடனடியாக தன் மனைவியிடம் அந்த வாலிபரின் மனைவி மற்றும் தாயாரிடம் நடந்து விவரங்களை கூறுமாறு கூறியுள்ளார். அதன்படி அந்த பெண்ணும் வாலிபர் வீட்டிற்கு சென்று அங்கு நடந்த விவரங்களை கூறிய நிலையில் அந்த வாலிபரின் அக்கா கோபத்தில் அந்த பெண்ணை செருப்பு மற்றும் கம்பால் அடித்து அசிங்கப்படுத்தினார்.
அந்தப் பெண் வாலிபரை கண்டிக்குமாறு அவர்களிடம் கூறிய நிலையில் ஆத்திரத்தில் அந்த வாலிபரும் அந்த பெண்ணை காலால் வாயில் மிதித்தார். இதில் அந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர்களிடமிருந்து தப்பித்து ஓடி வந்தார்.
மேலும் இதுகுறித்து தற்போது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.