வைகை உள்ளிட்ட 14 விரைவு ரயில்கள் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் இயக்கம் மற்றும் பயனியரின் தேவைக்கு ஏற்ப விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்கப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் நடப்பு ஆண்டில் கேரளா எம்பிகள் மற்றும் பயணியர் அமைப்புகளின் கோரிக்கையை ஆய்வு செய்த ரயில்வே வாரியம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 14 விரைவு ரயில்கள் இரு மார்க்கத்திலும் தலா ஒரு நிமிடம் என்று செல்ல கூடுதல் நிறுத்தம் வழங்கியுள்ளது.