தமிழகத்தில் படித்து முடித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு அரசு சார்பாக உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி  விளையாட்டு மையத்தில் நவம்பர் 1 முதல் தொடங்கும் காலாண்டுக்கு உதவித்தொகை  தொகை வழங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் . இதில் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள்  விண்ணப்பிக்கலாம் .

இந்த உதவி தொகை பெற பத்தாம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி பெற்றவர்களும் அதற்கு மேல் படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து செப்டம்பர் 30 அன்றைய தினத்தில் ஐந்து ஆண்டு வருடங்களுக்கு மேலாக வேலை வாய்ப்பு இல்லாமல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த உதவி தொகை பெற பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை டிசம்பர் 10ஆம் தேதிக்குள் அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டு மையத்தில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்ற நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.